டூ வீலர் ஓட்டும் பெண்மணிகளைப் பார்த்து மனதில்தோன்றியவை இந்தக் கேள்விகள்.  சும்மா ஜாலிக்காகத்தான்.  அந்த வாதி இந்த வாதின்னு அடிக்க வராதீக.

  1. தேடித் தேடி ஹைஹீல்ஸ்வாங்குறீங்க. வண்டியோட ரெண்டு பக்கமும் காலை நீட்டி அதைத் தரையில தேச்சு நோஹீல்ஸ் ஆக்குறீங்களே? அது ஏங்க அப்படி?
  2. ரெண்டு பக்கமும் கண்ணாடி இருக்கு. பின்னாடி என்ன நடக்குதுன்னு முன்னாடிச் சொல்லத்தான் அது. இருந்தாலும் திரும்பும்போது பின்னாடித் திரும்பிப் பார்த்தே திரும்புறீங்களே? அது ஏங்க அப்படி?
  3. திரும்புமுன் சிக்னல் செய்யனும்னு குழந்தைக்குக்கூடத் தெரியும். ஆனா நீங்க திரும்பீட்டேஏஏஏ சிக்னல் போடுறீங்களே? அது ஏங்க அப்படி?
  4. டவுன்பஸ் பின்னாடியே நூல் பிடிச்சுப் போறீங்க. அது நின்னா நிக்கிறீங்க போனாப் போறீங்க [டவுன் டு வீலர் சர்வீஸ் மாதிரி]. அது ஏங்க அப்படி?
  5. ரோட்டுல யாருமே இல்லைன்னாலும் 100 அடிக்கு ஒரு தடவை ஆரன் அடிக்கிறீங்க. அது ஏங்க அப்படி?
  6. ரெண்டு குழந்தைங்க, அவங்க பேக், லன்ச் பேக், உங்க பேக் எல்லாம் மாட்டிக்கிட்டு, ராதாகிருஷ்ணன் கடையில அரைக்கிலோ தக்காளி, ஒரு கிலோ வெங்காயம், ரெண்டு பால்பாகட் வாங்கிட்டு வர்ர்றீங்க? அது என்ன ஸ்கூட்டியா டாடா ஏஸா? அது ஏங்க அப்படி?
  7. லைட் எரியுதுன்னு பக்கத்துல வந்து சொன்னா ”தேங்க்ஸ்”னு சொல்லாம “பரவாயில்லை”ன்னு சொல்றீங்க? அது ஏங்க அப்படி?
  8. டு வீலர் பஞ்சராகுறது சகஜம். ஆனா உங்க வண்டி பஞ்சராயிட்டா காலேல முழிச்ச மூஞ்சி சரியில்லைன்னு அலுத்துக்கிறீங்க. அது ஏங்க அப்படி?
  9. இன்ஸ்சூரன்ஸ் இருக்கான்னு கேட்டா, “10 லட்ச ரூபாய்க்கு இருக்கு”ன்னு சொல்றீங்க. அது ஏங்க அப்படி?
  10. வண்டி நம்பர் கேட்ட 4565, 4656, 5646னு எல்லாக் காம்பினேசனும் சொல்றீங்க. 4556னு உன்மையான் நம்பரச் சொல்லவே மாட்டேங்கிறீங்க . அது ஏங்க அப்படி?

இன்னும் இருக்குங்க. ஆனா பயமா இருக்கு.

 

படம் : நெட்டிலிருந்து சுட்டது.