உள்ளுறையும் மிருகம்

வெறுப்பைத் தின்று

விரோதம் வளர்க்கும்

வக்கிர மிருகமொன்றை

நேரில் கண்டேன்.

சங்கிலிப் புகையன்

கையிடுக்கிலாடும்

முடிவிலாச் சிகரெட்

கனன்று தரும் கரும்புகை

காற்றில் போடும் கோலமாய்

பரப்புகிறது வன்மம்

பகட்டாடைப் பளபளப்பில்

தன்னழுக்கு மறைத்து

அடுத்தவன் அம்மணத்தில்

ஆனந்தம் காண்கிறதன் மனசு

செத்துப்போகாதா சீக்கிரம்

என்றேங்குவதைத் தவிர

வேறேதும் ஏலாமல்

கசப்பாய்க் கழிகிறது நாட்கள்

5 Responses so far | Have Your Say!

  1. T.V.Radhakrishnan  |  February 22nd, 2011 at 7:56 am #

    welcome Rajendran

    T.V.Radhakrishnan - Gravatar
  2. மணிஜி  |  February 22nd, 2011 at 8:40 am #

    //அம்மனத்தில்//

    அம்மணத்தில் ??

    மணிஜி - Gravatar
  3. வடகரை வேலன்  |  February 22nd, 2011 at 9:49 am #

    நன்றி சார்.

    நன்றாக இருக்கிறீர்களா?

    வடகரை வேலன் - Gravatar
  4. வடகரை வேலன்  |  February 22nd, 2011 at 9:49 am #

    நன்றி மணி

    வடகரை வேலன் - Gravatar
  5. sharfudeen  |  February 28th, 2011 at 7:35 am #

    சற்றே கோபத்தில் எழுதியது போல் தெரிகிறதே சார்!?

    sharfudeen - Gravatar

Leave a Feedback

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>