வாசிப்பும் நேசிப்பும்
இன்றுமுதல் புத்தகச்சந்தைத் திருவிழா.
குழுமமொன்றில் என் பரிந்துரையாக நான் சொல்லிய புத்தகங்கள் இவை
புது வாசகர்களுக்கு அம்ருதா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் “முத்துக்கள் பத்து” சிறுகதைத் தொகுப்பைப் பரிந்துரைக்கிறேன். விலை 40.00
1. வண்ணதாசன்
2. நாஞ்சில் நாடன்
3. அசோகமித்ரன்
4. ச தமிழ்ச்செல்வன்
5. தி.ஜானகிராமன்
6. கு.அழகிரிசாமி
7. ஆ.மாதவன்
8. வண்ணநிலவன்
கண்மணி குணசேகரன்
1. வெள்ளெருக்கு சிறுகதைத் தொகுதி
2. கோரை அல்லது அஞ்சலை நாவல்
சு. தமிழ்ச்செல்வி
1. அளம் – நாவல்
கந்தர்வன்
1. சீவன் – சிறுகதைத் தொகுதி
நாஞ்சில் நாடன்
1. சூடிய பூ சூடற்க – சிறுகதைத் தொகுதி
2. நஞ்சென்றும் அமுதென்றும் – கட்டுரைத் தொகுதி
பெருமாள் முருகன்
1. கங்கணம்
ஆதவன்
1. காகித மலர்கள்
கி.ரா
1. கோபல்ல கிராமம்
ஜோ டி க்ரூஸ்
1. ஆழி சூழ் உலகு
ஜெயமோகன்.
1, ஊமைச் செந்நாய்
எஸ்ரா
1. கோடுகள் இல்லாத வரைபடம்.
பொதுவாக எதைப்படிக்கும் முன்பும் ஒரு முன்முடிவு இல்லாமல் படித்தால் சுவையாக இருக்கும். நான் அபப்டித்தான் படிப்பேன். முன்னுரை மதிப்புரை எதையும் படிக்க மாட்டேன். இறுதியாகப் படித்தல் நாம் உணர்ந்ததும் முன்னுரை எழுதியவர் உணர்ந்ததும் வேறாக இருக்கும். இல்லையெனில் முன்னுரையில் சொல்லியது முன்னால் வந்து படிக்கும் ஆர்வத்தைக் குறைக்கும்.
நான் சொல்லி இருக்கும் பட்டியல் எல்லா வகைப் புத்தகங்களையும். அதிலிருந்து இந்த வகை பிடிக்கிறது என அதில் மேலும் தேடிப் படிக்கலாம்.






Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.

