சிந்திச் சிதறும்

சிறு நெல்லியென

சிதறித் தெறிக்கிறது மனது

ஒன்றில் தொடங்கி

மற்றதில் தாவி

பிறிதொன்றில் சாடி

அங்கும் நில்லாது

அடுத்ததிலும் தங்காது

மின்விசிறிக் காற்றில்

அலைந்தலையும் புகையென.

மழைநீரோடிய

சிற்றோடை தேங்கும்

வரியோடிய வண்டலாய்க்

கழிகிறது நாட்கள்

நன்றி : நேசமித்ரன் – “வரியோடிய வண்டல்”  பதம் தந்தமைக்கு

Pic Courtesy :www.abstractart.org